×

கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு

சென்னை: நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம்  அடைந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில  கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர்  கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான்  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டார்.  உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு  பரப்பவில்லை. எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதை  கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த மனு  விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Mansur Aligan Munjameen ,Chennai ,Vivek ,
× RELATED ரயிலில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்